2254. | ‘உந்தையோ இறந்தனன்; உம்முன் நீத்தனன்; வந்ததும், அன்னைதன் வரத்தில்; மைந்த! நீ அந்தம் இல் பேர் அரசு அளித்தி; அன்னது சிந்தனை எமக்கு’ எனத் தெரிந்து கூறினான். |
‘மைந்த! - பரதனே!; உந்தையோ இறந்தனன் - உன் தந்தையாகிய தயரதனோஇறந்துபட்டான்; உம் முன் - உன் தமயனாகிய இராமனோ (தந்தை சொற்கேட்டு); நீத்தனன் - (அரசைக்) கைவிட்டுக் கானகம் புகுந்தான்; வந்ததும் - (இந்த அரசுஉனக்குக்) கிடைத்திருப்பதும்; அன்னை தன் வரத்தில் - உன் தாயாகிய கைகேயியின்வரத்தால் ஆகும்; நீ அந்தம் இல் பேரரசு அளித்தி - நீ அழிவற்றதாகிய இந்தக்கோசலத் தரசை ஏற்று நடத்துக; அன்னது - (அவ்வாறு) நீ அரசு ஏற்பது; எமக்குச் சிந்தனை - எங்களுக்கு எண்ணம்;’ என - என்று; தெரிந்து கூறினான் - ஆராய்ந்து சொன்னான். மரபு வழித் தொன்றுதொட்டு வந்த அரசு என்பான், ‘அந்தம் இல் பேரரசு’ என்றான் எனினும்அமையும். 11 |