வசிட்டன் சொற் கேட்ட பரதன் அவல நிலை அடைதல் 2255. | ‘தஞ்சம் இவ் உலகம், நீ தாங்குவாய்’ எனச் செஞ்சேவே முனிவரன் செப்பக் கேட்டலும், ‘நஞ்சினை நுகர்’ என, நடுங்குவாரினும் அஞ்சினன் அயர்ந்தனன் - அருவிக் கண்ணினான். |
‘இவ் உலகம் - இந்த உலகம்; தஞ்சம் - (உனக்கு) அடைக்கலம்; நீ தாங்குவாய் - நீ (அரசனாக இருந்து) பாதுகாப்பாய்; என - என்று; முனிவரன் -முனிவர்களில் மேலான வசிட்டன்; செஞ்செவே - செம்மையாக; செப்பக் கேட்டலும்- சொல்லக் கேட்டவளவில்; அருவிக் கண்ணினான் - அருவிபோலக் கண்ணின் நீர் ஒழுகும்பரதன்; ‘நஞ்சினை நுகர்’ என - விடத்தை உண்பாயாக என்று ஒருவர் சொல்ல; (அதுகேட்டு) நடுங்குவாரினும் - நடுங்குகின்றவர்களைவிட; அஞ்சினன் அயர்ந்தனன்த- பயந்து சோர்ந்தான். ‘மகனே! உனை, மாநிலம் தஞ்சமாக நீ தாங்கு’ என்ற வாசகம் (1614.) என்ற கோசலை கூற்றுஇங்கு முதலடியோடு ஒப்பு நோக்கத்தக்கது. அயோத்திக்கு வந்தது முதல் அமுத வண்ணமாக இருக்கின்றபரதனுக்கு ‘அருவிக் கண்ணினான்’ என்பது ஒரு பெயராகக் கொள்க. 12 |