2263. | ‘ஆழியை உருட்டியும், அறங்கள் போற்றியும், வேள்வியை இயற்றியும், வளர்க்க வேண்டுமோ? ஏழினோடு ஏழ் எனும் உலகம் எஞ்சினும், வாழிய நின் புகழ்!’ என்று வாழ்த்தினார். |
‘ஆழியை உருட்டியும்-(அரசேற்று நடத்தி) ஆனைச்சக்கரத்தைச் செலுத்தியும்; அறங்கள் போற்றியும் -பல்வகையானஅறச்செயல்களைப் பாதுகாத்தும்; வேள்வியை இயற்றியும் -(அரசர்க்குரியபரி மேதம், இராயசூயம் முதலிய) யாகங்களைச் செய்தும்; வளர்க்க வேண்டுமோ?- (நின்புகழைஇனி நீ) வளர்க்க வேண்டியதில்லை; நின்புகழ்- (இத்தகைய நற்குண நற்செயல்களால்இப்போது பெற்றுள்ள) நின்புகழே; ஏழினோடு ஏழ்எனும் உலகம் எஞ்சினும் - பதினான்கு உலகமும் அழிந்திட்டாலும்; வாழிய - வாழ்வதாக;’ என்றுவாழ்த்தினார்-. வாழ்த்தினார் ‘அரசவையோர்’ என (2261.) முன்னைய பாடலின் இறுதிச் சொற் கொண்டுமுடிக்க. செயற்கையால் பிறர்புகழ் தேடவேண்டும்; ஆனால், பரதனுக்கு இயற்கையாகிய குணம்செயல்களே பெரும்புகழுக்குக்காரணமாயின என்று பாராட்டுதல் அரசவையோர் கருத்தாகக் கொள்க. 20 |