227.மறக் கண் வாள் இளைய வீரன்
     ஆணையை மறுத்தல் செல்லா
உறக்க மா மாதும், அண்ணல்
     உபய பங்கயங்கள் போற்றி,
‘துறக்கமாம், என்னல் ஆய
     தூய மதில் அயோத்தி எய்தி
இறுக்கும்நாள், எந்தை பாதம்
     எய்துவல்’ என்னப் போனாள்.

     உபய பங்கயம் - இரண்டாகிய தாமரை - இங்கே திருவடிக்கு
உருவகம். துயில் மடந்தைஇலக்குவனைத் தீண்டாது சென்றாளாம்.     22-2