2279. | செல்லிய செலவினால், ‘சிறிய திக்கு’ எனச் சொல்லிய சேனையைச் சுமந்ததே எனில், ஒல்லொலி வேலை நீர் உடுத்த பாரை, ‘ஓர் மெல்லியல்’ என்றவர் மெலியரேகொலாம்.? |
செல்லியசெலவினால் - பரந்து செல்கின்ற செல்கையால்; ‘திக்குசிறிய’-திசைகள் இடம் போதாமல் சிறியன; எனச் சொல்லிய சேனையை - என்று பிறரைச்சொல்லச்செய்கின்ற (பேரளவுள்ள) இந்தச் சேனையை; சுமந்தது எனில் - (இந்தப் பூமி)சுமந்து கொண்டுள்ளது என்றால்; ஒல் ஒலி வேலை நீர் உடுத்த பாரை- ஒல்லென்றுஒலிக்கின்ற கடல் நீரை ஆடையாகச் சுற்றி உடுத்துக் கொண்டுள்ள பூமியை; மெல்லியல்- மென்மைத் தன்மை உடைய பெண் என்று சொன்னவர்கள்; மெலியர் கொல் - மெலியர்போலும். ‘பூதேவி - நிலமகள்’ என்று சொல்லும் வழக்குப் பற்றியது. “நிலம் என்னும் நல்லாள்”என்றார் (குறள்.1040.) வள்ளுவரும். மெல்லியல் பெருஞ்சுமையைத் தாங்க மாட்டாள் ஆதலின்,பூமியை மெல்லியல் என்றல் பொருந்தாது என்று சமத்காரமாகக் கூறிச் சேனையின் மிகுதியைப் புலப்படுத்தினார். ‘ஏ’ காரங்கள் அசை. ‘கொல்’ ஐயப்பொருட்டு. 36 |