2293. | ஏடு அறு கோதையர் விழியின் எய்த கோல் ஊடு உற உரம் தொளைத்து, உயிர் உணாவகை. ஆடவர்க்கு அரும் பெருங் கவசம் ஆயது - காடு உறை வாழ்க்கையைக் கண்ணன் நண்ணவே. |
கண்ணன்- கண்ணாற் செய்யப்படும் அருளிற் சிறந்தவனாகிய இராமன்; காடு உறவாழ்க்கையை நண்ண - காட்டின்கண்வசிக்கும் வாழ்க்கையை மேற்கொள்ள, (அச்செயல்); ஆடவர்க்கு- ஆண்களுக்கு எல்லாம்; ஏடு அறு கோதையர் - புறவிதழ்நீக்கிய மலர் கொண்டு தொடுத்த மாலை அணிந்த மகிளிர்; விழியின் எய்த கோல்- கண்ணிலிருந்து எய்த காதற் பார்வை அம்பானது; உரம் ஊடு உறத் தொளைத்து உயிர்உணா வகை-மார்பினை ஊடுருவிச் சென்று அவர்கள் உயிரைப் போக்காதபடி; அரும்பெரும் கவசம் ஆயது-அரிய பெரிய கவசம் அணிதல் போன்றதாய்ப் பாதுகாப்பானது. இராமன் வனம் போய துயரால், பெண்டிரும் காதற் பார்வை இழந்தனர், ஆடவரும்அப்பார்வையால் துன்புறுதல் இலர் என்று இருவர்க்குமே இதனைக் கொள்க. ‘ஏ’ காரம்ஈற்றசை. 50 |