221.‘எய்த இன்னல் வந்த போது
     யாவரேனம் யாவையும்
செய்ய வல்லர் என்று கொள்க;
     சேண் நெறிக்கண் நீங்கிட,
மைய கண்ணி செய்ய பாதம்
     வல்ல ஆய; எம்பிதன்
கைகள் இன்று பன்னசாலை
     கட்ட வல்ல ஆயவே.’

     ‘துன்பம் வந்த போது யாரும் எவையும் செய்ய வல்லவர்’ என்ற உலக
நீதி இங்குக்கூறப்படுகிறது.                                    50-1