234.‘தீ அன கொடியவள்
     செய்த செய்கையை
நாயினேன் உணரின், நல்
     நெறியின் நீங்கலாத்
தூயவர்க்கு இடர் இழைத்து
     உழலும் தோமுடை
ஆயவர் வீழ் கதி
     அதனின் வீழ்க, யான்’

     தோம் - குற்றம். நல்லவர்க்குத் தீங்கு செய்யும் கயவர்கள் செல்லும்
நரககதியில் நான் செல்வேனாக.                                116-1