235.உந்து பொன்
     தடந் தேர் வலானொடும்,
மந்திரப் பெருந்
     தலைவர், மற்றுளோர்,
தந்திரத் தனித்
     தலைவர், நண்பினோர்,
வந்து சுற்றும் உற்று,
     அழுது மாழ்கினார்.

     தேர் வலான் - சுமந்திரன்;  மாழ்கினார் - மயங்கினார்,      125-1