2352. | சங்கமும் மகர மீனும், தரளமும் மணியும் தள்ளி, வங்க நீர்க் கடலும் வந்து தன் வழிப் படர, மானப் பொங்கு வெங் களிறு நூக்க, கரை ஒரீஇப் போயிற்று அம்மா - கங்கையும் இராமற் காணும் காதலது என்ன மாதோ! |
மானம்- பெருமை பொருந்திய; பொங்கு - மேல்கிளம்பிய; வெங்களிறு -கொடிய யானைகள்; நூக்க- தள்ளுதலால்; சங்கமும் மகரமீனும் தரளமும் மணியும்தள்ளி- சங்கு, சுறாமீன், முத்து, மணிக்கற்கள்ஆகியவற்றைத் தள்ளி; வங்க நீர்க் கடலும்- மரக்கலங்களையுடையநீர்மிகுந்த கடலும்; தன்வழி வந்துபடர - தன்னிடத்து வந்து பரவும்படி; கங்கை -கங்கா நதியும்; இராமன்காணும் காதலது என்ன - இராமனைக் காணும் அன்பு மீக்கூர்ந்தது என்னும்படி; கரை ஒரீஇப் போயிற்று - கரை கடந்து சென்றது. யானைகள் கங்கையில் நீந்தித் தென்கரை செல்லும்போது, கங்கைத் தண்ணீர்தள்ளப்பட்டுக் கரைக்கு மேலே பரவி யானைகளுக்கு முற்பட்டுத் தென் கரை அடைவது, கங்கையேஇராமனைக் காணும் காதலால் செல்வது போன்றது என்று தற்குறிப்பேற்றம் செய்தார்.தற்குறிப்பேற்றவணி. அம்மா வியப்பிடைச் சொல். மாது, ஓ - அசை. 50 |