2357. பொலங் குழை மகளிர், நாவாய்ப்
     போக்கின் ஒன்று ஒன்று தாக்க,
மலங்கினர்; இரண்டு பாலும்
     மறுகினர் வெருவி நோக்க,
அலங்கு நீர் வெள்ளம் தள்ளி
     அழிதர, அங்கம் இங்கும்
கலங்கலின், வெருவிப் பாயும்
     கயற்குலம் நிகர்த்த, கண்கள்.

    நாவாய்- (மகளிர் ஏறிச் செல்லும்) மரக்கலங்கள்; போக்கின் -
செல்லும் வேகத்தில்; ஒன்று ஒன்று தாக்க- ஒன்று மற்றொன்றோடு மோத;
பொலங்குழை மகளிர் - (அக்கலத்தில்உள்ள) பொன்னாலியன்ற குழை
அணிந்த மகளிர்; மலங்கினர் - மனம் கலங்கி; மறுகினர் - மயங்கி;
வெருவி - அச்சமுற்று;  இரண்டு பாலும் நோக்க - இரண்டுபக்கமும்
பார்க்க;  கண்கள் - (இவ்வாறு மிரண்டு பார்க்கு அவர்களின்) கண்கள்;
அலங்கும் நீர் வெள்ளம் தள்ளி அழிதர - அசைகின்ற நீர்ப்பெருக்குத்
தள்ளி நிலைகெட; அங்கும் இங்கும் கலங்கலின் - ஆற்று நீர் அங்கும்
இங்குமாகக் கலங்குவதனால்; வெருவிப் பாயும் - பயந்து துள்ளுகின்ற;
கயற்குலம் நிகர்த்த - மீன் கூட்டத்தைஒத்துள்ளன.

     கலத்தின் மோதலால் பயந்து  மிரளும் மகளிர் கண்களுக்கு,  கலம்
செல்லும் வேகத்தால்தள்ளப்படும் நீரில் பயந்து துள்ளும் கயல்மீன்கள்
உவமையாயின.  திடுக்கெனத் தோன்றும்அச்சத்தை வெரூஉதல் என்னும்
மெய்பபாடு என்பர்.                                            55