பரதன் வணங்க பரத்துவாசத முனிவர் ஆசி கூறி வினாவுதல்  

கலிவிருத்தம்

2375.வந்த மா தவத்தோனை, அம் மைந்தனும்
தந்தை ஆம் எனத் தாழ்ந்த, வணங்கினான்;
இந்து மோலி அன்னானும் இரங்கினான்,
அந்தம் இல் நலத்து ஆசிகல் கூறினான்.

    அம் மைந்தனும்- அந்தப் பரதனாகிய மகனும்; வந்த மா
தவத்தோனை
- (தன்னை எதிர்கொள) வந்த பெரியதவசியாகிய
பரத்துவாச முனிவனை; தந்தை ஆம் என - (தன்) தந்தையைப் போலக்
கருதி; தாழ்ந்து - (பணிவுடன்) விழுந்து; வணங்கினான் - வணக்கம்
செய்தான்;  இந்துமோலி அன்னானும் - சந்திரனைச் சடாமுடியில் தரித்த
சிவபிரானை ஒத்த அம் முனிவனும்; இரங்கினான் - (பரதனிடம்) பிரிவு
கொண்டவனாய்; அந்தம் இல் நலத்து ஆசிகள் -முடிவில்லாத
நன்மைகளைத் தரவல்ல ஆசிமொழிகளை;  கூறினான் - மொழிந்தான்.

     இந்து - சந்திரன், மோலி - சடாமுடி. மௌலி என்பது மோலி என
வந்தது.  தவச்சீலமும்,சடாமுடியும்,  காமனைக் காய்தலும் உடைமையால்
பரத்து வாச முனிவனுக்குச் சிவபிரான் உவமைஆயினார்.              1