2379. | உரைத்த வாசகம் கேட்டலும், உள் எழுந்து இரைத்த காதல் இருந் தவத்தோர்க்கு எலாம், குரைத்த மேனியோடு உள்ளம் குளிர்ந்ததால் - அரைத்த சாந்து கொடு அப்பியது என்னவே. |
உரைத்த - (இவ்வாறு பரதன்) கூறிய; வாசகம் கேட்டலும் - மனத்திறந்தசொற்களைக் கேட்ட அளவில்; உள் எழுந்து இரைத்த காதல் - (இராமனிடத்தில்)உள்ளேயிருந்து புறப்பட்டுப் பொங்கிய அன்பினை உடைய; இருந்தவத்தோர்க்கு எலாம் - பெரிய தவமுனிவர்களுக்கு எல்லாம்; அரைத்த சாந்து கொடு அப்பியது என்ன- நன்றாகஅரைத்த சந்தனத்தைத் கொண்டுவந்து பூசியதுபோல; குரைத்த மேனியொடு உள்ளம் -பூரித்தஉடம்போடு மனமும்; குளிர்ந்தது - குளிர்ச்சி அடைந்தது. தவத்தோர் - பரத்துவாசனோடு உடன் இருந்த முனிவரரையும் கூட்டி, முன்பே இராமன்பால் கழிபெருங்காதலுடையராய் அவன் வனம் புகுந்ததற்கு இரங்கிய உள்ளம் உடையவராதலின் பரதன் சொற்கள்அவர்களை மேலும் குளிர்வித்தன. மகிழ்ச்சியால் உடம்பு பூரித்தல் வழக்கு. ஆல் - ஏ, ஈற்றசைகள். 5 |