11. கங்கை காண் படலம்

238.வந்து எதிரே விழுந்தவனும்
     வணங்கினான்; வணங்காமுன்,
சந்த நெடுந் திரள்
     புயத்தான் தழுவினான்; தழுவியபின்,
இந்த இடர் வடிவுடன் நீ
     எங்கு எழுந்தாய் - இமையோர்தம்
சிந்தையினும் சென்னியினும்
     வீற்றிருக்கும் சீர்த்தியாய்!

    2334 ஆம் பாடலின் மாற்றுருவம் இப்பாடல்.                32-1