பரதன் சேனைக்கும் உடன் வந்தோர்க்கும்  
பரத்துவாசன் விருந்து அளித்தல்  

2380.ஆய காதலோடு ஐயனைக் கொண்டு, தன்
தூய சாலை உறைவிடம் துன்னினான்;
‘மேய சேனைக்கு அமைப்பென் விருந்து’ எனா,
தீயின் ஆகுதிச் செல்வனும் சிந்தித்தான்.

     தீயின்- (ஓம வேள்வியின் ஆக்கிய) நெருப்பில்; ஆகுதிச்
செல்வனும் -ஆகுதிகளை இட்டுச் செய்கின்ற வேள்விச் செல்வனாகிய
பரத்துவாசனும்; ஆய காதலோடு -மேலிட்டெழுந்துஉள்ளம் குளிர்ந்த
அன்போடு; ஐயனைக் கொண்டு - பரதனை அழைத்துக்கொண்டு;தன் -
தன்னுடைய;  தூய சாலை உறைவிடம் - தூய்மையானதங்கும் இடமாகிய
தவச் சாலையை; துன்னினான் - சென்றடைந்தான்;‘மேய சேனைக்கு -
பரதனுடன்வந்துள்ள சேனைகளுக்கு;
விருந்துஅமைப்பென்’ எனாச்
சிந்தித்தான்
- விருந்து செய்வேன் என்று தன மனத்தில் கருதினான்.

     வேள்விச் செல்வன் ஆதலின் தேவர்களையும், பிறவற்றையும்
வருவித்து  விருந்து  செய்யஇயன்றது  என அறிக. ‘சேனைக் கமைப்பெண்
விருந்து’ என்பது பரதனையும் உள்ளடக்கியதேயாம்;அன்றி, பரதன் விருந்து
அருந்தாமையின் அவன் தவக்கோலம் கண்டு அவனை விடுத்துச் சேனையை
மட்டுமே பரத்துவாசன் கருதினன் எனலும் ஆம்.  சேனை என்று கூறினும்
உடன்வந்தார்,  தாயர்,பரிசனங்கள் அனைவரையும் கருதும் என்க.       6