2383.நானம் நன்கு உரைத்தார்; நளிர் வானிடை
ஆன கங்கை அரும் புனல் ஆட்டினார்;
தான மாமணிக் கற்பகம் தாங்கிய
ஊனம் இல் மலர் ஆடை உடுத்தினார்.

     (அரம்பையர் மைந்தர்க்கு) நானம் - (கஸ்தூரி முதலியவற்றாலாய)
வாசனைப்பொடியை; நன்கு உரைத்தார் - நன்றாக உடம்பில் பூசினர்;
நளிர் வானிடை ஆன -குளிர்ந்த ஆகாயத்திடத்தில் உள்ள;  கங்கை
அரும்புனல்
ஆட்டினார். கங்கைநதியின் அரிய நீரால் முழுக்காட்டி;
தான மா மணிக் கற்பகம் - தேவருலகத்தில் உள்ளபெரிய அழகிய
கற்பக மரங்கள்; தாங்கிய - சுமந்த; ஊனம் இல் மலர் ஆடை -குறைவு
இல்லாத மலர்களால் ஆகிய ஆடையை; உடுத்தினார் - அணிவித்தார்கள்.

     நானம் - கஸ்தூரி. இங்கு அதுமுதலாகிய, கூட்டுப் பொருளாகிய
கண்ணம் குறித்தது. மலர் ஆடை -மலரே ஆடையாம்;  பூத்தொழில்
பொதிந்த ஆடையும் ஆம். தான - வண்மைக்குணம் உடைய (கற்பகம்)என
உரைத்தலும் ஒன்று.                                             9