2387.மாதர் யாவரும், வானவர் தேவியர்
கோது இல் செல்வத்து வைகினர் - கொவ்வை வாய்த்
தீது இல் தெய்வ மடந்தையர், சேடியர்,
தாதிமார் எனத் தம் பணி கேட்பவே.

     மாதர் யாவரும்- (பரதனுடன் வந்த) மகளிர் எல்லாரும்; கொவ்வை
வாய்த்தீது  இல் தெய்வ மடந்தையர் -
கொவ்வைக் கனி போலச்
சிவந்த வாயினை உடைய தீமையற்றதேவ மகளிர்;  சேடியர் தாதிமார்
என
- தோழிப் பெண்களும்,  குற்றேவல் மகளிரும்போல்;  தம் பணி
கேட்ப
- தாம் இட்ட வேலைகளை நிறைவேற்ற; வானவர் தேவியர்
கோது இல் செல்வத்து
- வானுலகத்துத் தேவர் மகளிரது குற்றமற்ற
செல்வத்தில்; வைகினர்- இன்புற்றிருந்தனர்.

     ஆடவர் அரம்பை மகளிர் இன்பம் துய்த்தலால் மகிழ்ந்தனர்.
மகளிரோ மற்றுத் தேவப்பெண்களைப் பணிகோடலால் மகிழ்ந்தனர்
என்றவாறாம். தெய்வமடந்தையர் வானவர் தேவியரின்வேறுபட்டவர்
ஆவர். ‘ஏ’ ஈற்றசை.                                            13