கதிரவன் தோன்றுதல் 2392. | நீல வல் இருள் நீங்களும், நீங்குறும் மூலம் இல் கனவின் திரு முற்றுற, ஏலும் நல் வினை துய்ப்பவர்க்கு ஈறு செல் காலம் என்னக் கதிரவன் தோன்றினான். |
நீலம் - நீல நிறம் உள்ள; வல் இருள் - திணிந்த இருளானது; நீங்களும் - நீங்கிய அளவில்; நீங்குறும் - தாறும் இல்லாமல் போகி விடுகிற; மூலம் இல் - அடித்தளம் அற்ற; கனவின் - கனவு போல; திருமுற்றுற -சேனைகள் அனுபவித்த செல்வ போகம் முடிவடையும் படி; ஏலும் நல்வினை துய்ப்பவர்க்கு -பொருந்திய புண்ணியப் பயனை அனுபவிப்பவர்க்கு; ஈறுசெல் காலம் என்ன - அது முடிவடையும் காலம்போல; கதிரவன் - சூரியன்; தோன்றினான் -. கங்குற் பொழுது நீங்கியது; கதிரவன் தோன்றினான்; முன்பு பரதனுடன் வந்தோர்அனுபவித்த போகமும் முடிவுக்கு வந்தது. இதனைக் கனாப்போல என்றார். புண்ணியம் முடிந்த பின்னர்மீண்டும் சுவர்க்கத்திலிருந்து மண்ணுலகிற்கு வருவார்போல அவர்கள் நிலை ஆகிறது ஆகலின் “ஈறு செல் காலம் என்ன” என்று கதிரவன் தோற்றத்தைவருணித்தார். 18 |