பரதன் சேனை பாலை நிலத்தை அடைதல்  

2394.காலை என்று எழுந்தது கண்டு, வானவர்,
‘வேலை அன்று; அனிகமே’ என்று விம்முற,
சோலையும் கிரிகளும் சுண்ணமாய் எழ,
பாலை சென்று அடைந்தது - பரதன் சேனையே.

     பரதன் சேனை -; காலை என்று எழுந்தது  கண்டு - காலைப்
பொழுது  வந்துவிட்டது என்றுகருதிப் புறப்பட்டது கண்டு;  வானவர் -
தேவர்; ‘வேலை அன்று; அனிகமே’ என்றுவிம்முற - இது கடல் அன்று,
சேனைதான் எனக் கருதித் தமது ஐயம் நீங்கி மனக்களிப்புஅடைய;
(அச்சேனை) சோலையும்  கிரிகளும் சுண்ணமாய் எழ - (தாம் செல்லும்
வழியில்உள்ள) சோலையும், மலைகளும் புழுதியாகி மேலே புறப்பட;
பாலை சென்று அடைந்தது - பாலைநிலத்தைச் சென்று சேர்ந்தது.

     இதுகாறும் இருளில் கடல் என்று கருதியிருந்த வானவர் பகற்பொழுது
வந்து புறப்பட்ட அளவிலேசேனை என்று துணிந்தனர் என்பதால் ‘ஏ’
ஈற்றசை.                                                    20