2397. | ‘பெருகிய செல்வம் நீ பிடி’ என்றாள்வயின் திருகிய சீற்றத்தால் செம்மையான், நிறம் கருகிய அண்ணலைக் கண்டு, காதலின் உருகிய தளிர்த்தன - உலகை ஈட்டமே. |
‘பெருகியசெல்வம் நீ பிடி’ - மிக்க அரசச் செல்வத்தைப் பரதா! நீ ஏற்றுக்கொள்; என்றாள்வயின் - என்று சொல்லியகைகேயியிடத்தே; திருகியசீற்றத்தால் - கழன்று எழுந்த கோபத்தால்; செம்மையான் - முகம் சிவந்த; கருகிய அண்ணலைக் கண்டு- (இயல்பாய்க்)கருத்த திருமேனியுடைய பரதனைக் கண்டு; காதலின்- அவன்பாற் கொண்டஅன்பினால்; உலவை ஈட்டம் - (பாலைநிலத்திற்) பட்ட மரக்கூட்டம்; உருகிய- மனம் இரங்கி; தளிர்த்தன- தளிர் விட்டு உயிர்பெற்றவாயின. பட்ட மரங்கள் தளிர்த்துச் செழித்துப் பரதன் செல்லும் வழி இனிதாயிற்று என்றார்.‘ஏ’ ஈற்றசை. 23 |