2399. | தூளியின் படலையும், துரகம், தேரொடு, மூள் இருஞ் சினக் கரி முழங்கும் ஓதையும், ஆள் இருங் குழுவினர் ஆரவாரமும், ‘கோள்இரும் படை இது’ என்று, உணரக் கூறவே, |
(சேனை செல்கிறபோதுஎழுந்த) தூளியின் படலையும் - சேனாபராகம் எனப்பெறும்புழுதித் திரளும்; துரகம், தேரொடு, மூள் இருஞ் சினக்கரி முழங்கும் ஓதையும் - குதிரை,தேர், மேலும் மேலும் உண்டாகிற பெரிய கோபத்தையுடைய யாளை ஆகியவை ஆர்ப்பரிக்கும் சப்தமும்;ஆள் இருங் குழுவினர் - காலாட்படையாகிய பெரிய கூட்டத்தினரின்; ஆரவாரமும் -பேரொலியும்;‘கோள் இரும்படை இது’என்று -பிறரைக் கொல்ல வரும் பெரும்படை இது என்று; உணரக் கூற - பலரும் அறிய எடுத்துச்சொல்ல....(மேல் முடியும்). புழுதியும், ஒலியும் படையின் பெருமை, வலி ஆகியவற்றை முன்னுணர்த்தின; அது கண்டு கேட்டுச்சீறி எழுந்தான் இலக்குவன் என்று அடுத்த பாட்டில் முடிகிறது. கோள் - கொலை சூழ்தல் ஆகும்.வலிய என்றும் ஆகும். ‘ஏ’ ஈற்றசை. 25 |