240.தன் அன தம்பியும்,
     தாயர் மூவரும்,
சொன்ன தேர் வலவனும்,
     தூய தோழனும்,
துன்னினர் ஏறலும்,
     துழா துடுப்பு எனும்
நல்நயக் காலினால்
     நடத்தல் மேயினான்.

     தம்பி - சத்துருக்கனன்; தேர் வலவன் - சுமந்திரன்; தோழன் -
குகன்; துழா துடுப்பு - துழாவுகின்ற துடுப்பு. இனி துழாவும், துடுப்பும்
என்னும் இரண்டுகால்களால் படகை நடத்துதல் என்றும் ஆம். துழா
என்பது நீரைத் துழாவும் நீண்ட கோல் ஆகும். துடுப்பு - மட்டை
ஆகும். 63-2