பரதன் சேனை எழுச்சி கண்டு இலக்குவன் சீற்றம் அடைதல்   | 2400. | எழுந்தனன்,  இளையவன்; ஏறினான், நிலம்  கொழுந்து உயர்ந்தனையது ஓர் நெடிய குன்றின்மேல்;  செழுந் திரைப் பரவையைச் சிறுமை செய்த அக்  கழுந்துடை வரி சிலைக் கடலை நோக்கினான். |  
      (பரதன் சேனைகள் வரும் நிலையைத் தன் குறிப்பால் உணர்ந்து)  இளையவன் -இலக்குவன்;  எழுந்தனன் - எழுந்து;  நிலம் கொழுந்து  உயர்ந்தனையது ஓர் நெடியகுன்றின்மேல் ஏறினான் - நிலவுலகம்  கொழுந்துவிட்டு உயர்ந்தாற் போன்றதான ஒருநீண்டுயர்ந்த மலையின் மேல்  ஏறி;  செழுந்திரைப் பரவையை - வளவிய அலைகளையுடையகடலை;  சிறுமை செய்த - சிறியது  எனக் கருதும்படி செய்த; அக் கழுந்து உடை வரிசிலைக் கடலை - அந்த வலிமை மிக்க கட்டமைந்த வில்லை ஏந்திய  சேனைக் கடலை;  நோக்கினான் - பார்த்தான்.      நலத்தின் மேல் உள்ள நெடிய மலை, நிலம் கொழுந்துவிட்டு  உயர்ந்தது  போல் உள்ளதுஎன்றார். தற்குறிப்பேற்றம். சேனைக் கடலின்  பெருமை நோக்கியவழி கடல் சிறியதாக  உள்ளது.கழுந்து - வலிமை.  “கழுந்தோடும் வரிசிலைக்கைக் கடற்றானை” (237.) எனப் பாலகாண்டத்து  வருதல்காண்க. கழுந்து - வில்லின் கழிப் பகுதியாகும் என்பதும் ஒன்று.  வில்லை இடையறாது கையிற்பிடித்தலால் தேய்ந்து  வழுவழுப்பாதலைக்  ‘கழுந்து’ எனக் கூறுவதாகவும் பொருள் உரைப்பர்.இளையவன் எழுந்து,  ஏறி, நோக்கினான் என முடிக்க.                                  26  |