இலக்குவன் சீற்றத்துடன் இராமனை அடைந்து கூறத் தொடங்குதல் 2402. | குதித்தனன் பாரிடை; குவடு நீறு எழ மதித்ததனன்; இராமனை விரைவின் எய்தினான்; ‘மதித்திலன் பரதன், நின்மேல் வந்தான், மதில் பதிப் பெருஞ் சேனையின் பரப்பினான்’ என்றான். |
(இலக்குவன் சீற்றத்தானாய்) குவடு நீறு எழ மிதித்தனன், பாரிடைக் குதித்தனன் -மலை உச்சி பொடுபடும்படி (மிகுந்த வேகத்தோடு) மிதித்துத் தரையிலே குதித்து; விரைவின் -வேகமாக; இராமனை எய்தினான் - இராமனை வந்தடைந்து; ‘பரதன் மதித்திலன் -பரதன் நின்னை ஒரு பொருளாகக் கருதாமல்; மதில் பதிப் பெருஞ் சேனையின் பரப்பினான்- மதில் சூழ்ந்த அயோத்தி நகரத்துப் பெருஞ் சேனைப் பரப்பினை உடையவனாய்; நின்மேல்வந்தான் - உன்மேல் போர்க்கு வந்தான்;’ எனா - என்று கூறி......(மேல்முடியும்). இராமனை மதியாது பரதன் போர்க்கு வந்தான் என்றான் -‘மதில் பதி’ என்றது அயோத்தியை. சேனை உடன் வந்ததே இலக்குவனது ஐயத்தை உறுதிப் படுத்துவதாகஅமைந்தது என்பது இதனால் வெளியாம். 28 |