இலக்குவன் வீர உரை  

2404. ‘இருமையும் இழந்த அப் பரதன் ஏந்து தோள்
பருமையும், அன்னவன் படைத்த சேனையின்
பெருமையும், நின் ஒரு பின்பு வந்த என்
ஒருமையும், கண்டு, இனி உவத்தி, உள்ளம் நீ.

     ‘இருமையும் இழந்த - இம்மை,  மறுமை இரண்டையும் சேர இழந்த;
அப் பரதன் ஏந்துதோள் பருமையும் - அந்தப் பரதனது  உயர்ந்த
தோளின் பருத்த தன்மையும்; அன்னவன்- அப் பரதன்;  படைத்த
சேனையின்
- பெற்றுள்ள சேனையின்;  பெருமையும் -பெருமையையும்;
நின்பின்பு வந்த - உனது  பின்னாலே வந்த; ஒரு என் - தனியான
என்னுடைய; ஒருமையும் - ஒப்பற்ற தன்மையையும்;  கண்டு - (இப்போது)
பார்த்து; இனி நீ உள்ளம் உவத்தி - இனிமேல் நீ மனமகிழ்ச்சி
அடைவாயாக......

     அண்ணன் மேல் போர்தொடுத்து வந்தான் எனவே அறத்துக்கு
மாறுபட்டான்; இருமையும் இழந்தான்என்றானாம். யான் ஒருவனே
அத்துணைச் சேனைகளையும் அழிப்பதைப் பார் என்றானாம்.          30