2406. ‘கருவியும், கைகளும், கவச மார்பமும்,
உருவின; உயிரினோடு உதிரம் தோய்வு இல
திரிவன - சுடர்க் கணை - திசைக் கை யானைகள்
வெருவரச் செய்வன; காண்டி, வீர! நீ.

     ‘வீர! நீ - இராமனே ! நீ; கருவியும் கைகளும் கவச மார்பமும்
உருவின
-எதிரிகளது ஆயுதங்களையும்,  கரங்களையும்,  கவசமணிந்த
மார்பகத்தையும்  உருவிக்கொண்டு; உயிரினோடு - அவர்கள் உயிரையும்
உடன்பற்றி;  உதிரம் தோய்வு இல -இரத்தத்தில் சிறிதும் தோயாமல்;
சுடர்க்கணை - என்னுடைய ஒளிபடைத்த அம்புகள்;  திசைக்கை
யானைகள்
- எட்டுத் திசைப் பக்கத்திலும் உள்ள யானைகளும்; வெருவர-
அஞ்சும்படி;  திரிவன செய்வன - சுற்றித் திரிதல் செய்வனவற்றை;
காண்டி -பார்ப்பாயாக....

     அம்புகள் உடலிற் பாய்ந்து உருவியும் உதிரம் தோயாமல் இருத்தலின்
அவற்றைக் கண்டுதிசையானைகள் வெருவின. கை திசையொடு வருதலின்
பக்கமாம்.                                                   32