2442.பன்ன அரிய நோன்பின்
     பரத்துவனே ஆதி ஆம்
பின்னு சடையோரும்,
     பேர் உலகம் ஓர் ஏழின்
மன்னவரும், மந்திரியர்
     எல்லாரும், வந்து அடைந்தார்;
தன் உரிமைச் சேனைத்
     தலைவோரும்தாம் அடைந்தார்.

     பன்ன அரிய - சொல்லுதற்கு அரிய; நோன்பின் - தவத்தை
உடைய; பரத்துவனே ஆதி ஆம் - பரத்துவாசன் முதலாக உள்ள;
பின்னு சடையோரும் -திரித்துவிட்ட சடையை உடைய முனிவர்களும்;
பேர் உலகம் ஓர் ஏழின் மன்னவரும் - ஓர்ஏழு உலகங்களின்
அரசர்களும்; மந்திரியர் எல்லாரும் - அமைச்சர்கள் எல்லாரும்; வந்து
அடைந்தார் -
வந்து  சேர்ந்தார்கள்; தன் உரிமைச் சேனைத்
தலைவோரும் தாம்அடைந்தார்
- சக்கரவர்த்திகளுக்குரிய சேனையின்
தலைவர்களும் வந்து சேர்ந்தார்கள்.

     பரதனுடன் வந்தோர் பலரும் பின்னர் வந்து சேர்ந்தனர். ஆதலின்,
அவர்கள் எல்லாம்இராமனை நெருங்கினபடியை இதனாற் கூறினார் ‘தாம்’
என்பது உரையசை.                                           68