2450.‘இவ் உலகத்தினும் இடருளே கிடந்த,
அவ் உலகத்தினும் நரகின் ஆழ்ந்து, பின்
வெவ் வினை துய்ப்பன விரிந்த யோனிகள்,
எவ் அளவில் செல எண்ணல் ஆகுமோ?

     ‘(உயிர்) இவ் உலகத்தினும் - இம்மைக்கண்ணும்; இடருளே கிடந்து-
துன்பத்திற் கிடந்து உழன்று;  அவ் உலகத்தினம் - மறுமைக் கண்ணும்;
நரகின்ஆழ்ந்து - நரகத்தில் அழுந்தித் துன்புற்று; பின் - பிறகு;
செல்வினைதுய்ப்பன - கொடிய வினைப்பயனை அனுபவித்தற் குரியவாய;
விரிந்த யோனிகள் -பல்வேறு வகையான பிறவிவகைகள்; எவ் அளவில்
செல
- எந்தக் கணக்கில் அடங்க; எண்ணல் ஆகுமோ? - என்னக்
கூடுமோ? (கூடாது என்றபடி)

     உயிர் எடுக்கும் பல்வேறு வகையான பிறவிகள் கணக்கில் அடங்காதன.
“உரை சேரும் எண்பத்து நான்கு நூறாயிரமாம் யோனி பேதம்” (திருஞா.
தேவா: 1-132.4) என்றார் வினைவழியில் உயிர் இவ்வாறெல்லாம் ஆதலின்
அதுபற்றி இரங்கவேண்டா என்றார்.                               76