2453. | ‘விண்ணு நிர் மொக்குகளின் விளியும் யாக்கையை எண்ணி, நீ அழுங்குதல் இழுதைப்பாலதால்; கண்ணின் நீர் உகுத்தலின் கண்டது இல்லை; போய் மண்ணு நீர் உகுத்தி, நீ மலர்க்கையால்’ என்றான். |
‘நீ-; விண்ணு நீர் மொக்குளின் - ஆகாயத்திலிருந்து பெய்யும் மழையில் எழுந்தநீர்க்குமிழி போல்; விளியும் - (நிலையில்லாமல்) அழிகிற; யாக்கையை -உடம்பைக் குறித்து; எண்ணி அழுங்குதல் - சிந்தித்து வருந்துதல்; இழுதைப்பாலது- பேதைமையின்பாற் படுவதாகும்; கண்ணின் நிர் உகுத்தலின் கண்டது இல்லை - கண்ணீர்சொரிதலால் அடையும் பயன் ஒன்றும் இல்லை; நீ மலர்க்கையால் - நீ தாமரை மலர்போன்ற கைகளால்; மண்ணு நீர் உகுத்தி- (பாவத்தைப் போக்கித்) தூய்மை செய்யும் தருப்பண நீரைச் சொரிவாயாக;’ என்றான் - என்று வசிட்டன் கூறினான். துக்க மிகுதியால் கூறியும் இராமன் நீர்க்கடன் செய்ய எழாமையால் மீண்டும் - வசிட்டன் கூறவேண்டியதாயிற்று. மண்ணு நீர் - மண்ணில் நீர் உகுத்து என்னும் பொருள் பெரும். இழுதைப்பாலதால் - ‘ஆல்’ அசை. 79 |