சீதையின் பாதங்களில் பரதன் வீழ்ந்து புலம்புதல்  

2457.எய்திய வேலையில், தமியள் எய்திய
தையலை நோக்கினன்; சாலை நோக்கினான்;
கைகளின் கண்மலளிளிர் புடைத்து, கால்மிசை,
ஐயன், அப் பரதன் வீழ்ந்து அரற்றினான் அரோ!

     எய்திய வேலையில் - அந்தக் குடிலை அடைந்தபொழுது; ஐயன்
அப்பரதன்
-ஐயனாகிய அந்தப் பரதன்; தமியள் எய்திய தையலை -
தனியளாய் வனம் புகுந்த சீதையை; நோக்கினன் - பார்த்து; சாலை
நோக்கினான்
- அவள் இருந்த குடிலையும்பார்த்து; கண்மலர் கைகளின்
புடைத்து
- மலர்போன்ற கண்களில் கைகளால்அடித்துக்கொண்டு;
கால்மிசை - அப்பிராட்டியின் திருவடிகளில்; வீழ்ந்து -விழுந்து;
அரற்றினான் - புலம்பினான்.

     தமியள் எய்திய - குடிலில் தனியளாயிருந்த என்றும் ஆம். துக்க
மிகுதிக்கண் கண்களில்அடித்துக்கோடல் வழக்கு. ‘அரோ’ ஈற்றசை.     83