2465. | தாயரும் தலைப்பெய்து தாம் தழீஇ, ஒய்வு இல் துன்பினால் உரறல் ஓங்கினார்; ஆய சேனையும், அணங்கனார்களும், தீயில் வீழ்ந்து தீ மெழுகின் தேம்பினார். |
தாயரும் - தாய்மார்களும்; தலைப்பெய்து - ஒன்று சேர்ந்து; தாம் தழீஇ - தாங்கள் இராமனைத் தழுவிக்கொண்டு; ஓய்வு இல் துன்பினால் - ஒழிதல்இல்லாத துக்கத்தோடு; உரறல் ஓங்கினார் - கதறத் தொடங்கினார்; ஆய சேனையும்- உடன் வந்த சேனைகளும்; அணங்கனார்களும் - பெண்களும்; தீயில் வீழ்ந்து தீமெழுகின் - தீயின் விழுந்து தீகின்ற மெழுகு போல; தேம்பினார் - மனம் உருகிஅழுதார்கள். தீ மெழுகு - வினைத்தொகை உரறல் - கதறல், பேரொலி செய்தலாம். உரறு - பகுதி. துயரில் கைகேயியும் இணைந்தது காண்க. 91 |