மறு நாள் யாவரும் சூழ இருக்க, இராமன் பரதனை, வினாவுதல் 2469. | அன்று தீர்ந்தபின், அரச வேலையும், துன்று செஞ் சடைத் தவரும், சுற்றமும், தன் துணைத் திருத் தம்பிமார்களும், சென்று சூழ ஆண்டு இருந்த செம்மல்தான் |
அன்று தீர்ந்தபின் - அன்றையநாள் கழிந்தபிறகு (மறுநாள்); அரச வேலையும்- அரசர் கூட்டமும்; துன்று செஞ்சடைத் தவரும்- நெருங்கிய சிவந்த சடையினை உடையமுனிவர்களும்; சுற்றமும் - சுற்றத்தினரும்; தன் துணைத் திருத் தம்பிமார்களும்- தன்னுடைய இணைபிரியாத சீரிய இளவல்களும்; சென்று சூழ - சென்று சற்றிலும் இருக்க; ஆண்டு இருந்த - அங்கே வீற்றிருந்த; செம்மல்- தலைமையோனாய இராமன்...(மேல் முடியும்) அரச வேலை - அரசர் வேலை. ஈறுகெட்டது. வேலை - கடல் என்பது ஈண்டுக் கூட்டத்தை உணர்த்தியது. உருவகம். மூவரையும் ஒருசேரத் தம்பிமார்கள் என்றார். செம்மல்தான் ‘பரிந்து கூறினான்’ (2470) என முடியும். 95 |