2472.‘மனக்கு ஒன்றாதன வரத்தின் நின்னையும்,
நினக்கு ஒன்றா நிலை நிறுவி, நேமியான் -
தனைக் கொன்றாள் தரும் தனையன் ஆதலால்,
எனக்கு ஒன்றா, தவம் அடுப்பது எண்ணினால்?

     ‘மனக்கு ஒன்றாதன - (சான்றோர்) மனத்துக்குப் பொருத்தம்
இல்லாதனவாகிய; வரத்தின் - வரத்தினால்; நின்னையும் நினக்கு
ஒன்றாநிலை நிறுவி
- உன்னையும்உனக்குப் பொருந்தாத நிலைமையில்
நிறுத்தி; நேமியான்தனை - சக்கரவத்தியாகியதயரதனை; கொன்றாள் -
கொன்ற கைகேயி; தரும் - பெற்ற; தனையன் -மகன்; ஆதலால் -;
எனக்கு-; எண்ணினான்
- நினைத்தால்; தவம் - விரதவொழுக்கத்தை;
அடுப்பது - மேற்கொள்ளுவது; ஒன்றா - பொருந்தாது.

     ‘ஒன்றா’ என்பது ‘ஒன்றாது’ என்பதன் விகாரம். நான் தவம் மேற்
கொள்வது பொருந்தாது என்று கருதியோ இவ்வாறு என்னை வினாவினாய்
என்பது குறிப்பு. முறைமை தவறியதைக் கேட்ட வரம் ஆதலின் ‘மனக்கு
ஒன்றாதன வரம்’ என்றான்.                                      98