2473. | ‘நோவது ஆக இவ் உலகை நோய் செய்த பாவகாரியின் பிறந்த பாவியேன், சாவது ஒர்கிலேன்; தவம் செய்வேன் அலேன்; யாவன் ஆகி, இப் பழிநின்று ஏறுவேன்? |
நோவது ஆக - வருந்துவதாக; இவ் உலகை - இந்த உலகத்தை; நோய்செய்த - துன்புறுத்திய; பாவகாரியின் - பாவத்தைச் செய்தவனிடத்தில்; பிறந்த -; பாவியேன் - பாவியாகிய யான்; சாவது ஒர்கிலேன் - சாகத்துணிந்தேனில்லை; தவம் செய்வேன் அலேன் - தவம் செய்வதற்குத் தக்கவனும் அல்லேன்; யாவன் ஆகி இப்பழி நின்று ஏறுவேன்? - (அப்படியானால்) எத்தன்மையானாகி இந்தப்பழியிலிருந்து நீங்குவேன்? பழிநீங்குவது இறப்பினாலோ பிராயச்சித்தமாகத் தவம் செய்வதனாலோ ஆகவேண்டும்.இரண்டும் இல்லையானால் என் பழியை எவ்வாறுதான் போக்கிக் சொள்வேன் எனப் பரதன் மனம்கலங்கினான். பாவகாரி - பாவி. 99 |