2475. | ‘பிறந்து நீயுடைப் பிரிவு இல் தொல் பதம் துறந்து, மா தவம் தொடங்குவாய் என்றால், மறந்து, நீதியின் திறம்பி, வாளின் கொன்று அறம் தின்றான் என, அரசுஅது ஆள்வெனோ? |
‘பிறந்து - (சக்கரவர்த்திக்கு மூத்த மகனாகப் ) பிறந்து; நீயுடைப் பிரிவு இல் தொல் பதம் - நீ உரிமையாகப் பெற்றுடை உன்னைப் பிரிதல் இல்லாத பழையதாகிய அரசபதவியை ; துறந்து - கைவிட்டு; மாதவம் தொடங்குவாய் என்றால் - நீயேபெரிய தவத்தைச் செய்யத் தொடங்குவாயெனின்; மறந்து - அறிவு கெட்டு; நீதியின்திறம்பி - நீதிக்கு மாறுபட்டு; வாளின் கொன்று - வாளால் கொலை செய்து; அறம் தின்றான் என - அறத்தை அழித்தவன் என்று சொல்லுமாறு; அரசு அது ஆள்வெனோ? - உரிமையில்லாத அரசை ஆள்வேனோ? (ஆளேன் என்றானாம்) உரிமையும் உறவும் உடைய நீயே அரச பதவி கைவிட்டுத் தவம் செய்வாய் ஆனால், அஃதில்லாத யான் ஆளத் தொடங்குதல் வலிந்து கைப்பற்றி முறை தவறி ஆள்வதாக அன்றோ முடியும் என்றானாம். வாளின் கொன்று - வாளால் மிரட்டி என்னும் பொருளில் வந்துள்ளது. அறம் தின்றல் - தருமத்தை அடியோடழித்துவிடல். 101 |