2480.‘பரவு கேள்வியும், பழுது இல் ஞானமும்,
விரவு சீலமும், வினையின் மேன்மையும் -
உர விலோய்! - தொழற்கு உரிய தேவரும்,
“குரவரே”எனப் பெரிது கோடியால்.

     ‘உர விலோய் - வலிமை பொருந்திய வில்லை உடையவனே!; பரவு
கேள்வியும்
- புகழ்ந்து சொல்லப்படும் நூற்கேள்வியும்;  பழுது  இல்
ஞானமும்
- குற்றமற்றநல்லுணர்வும்;  விரவு சீலமும் - உடன்
கொள்ளத்தக்க ஒழுக்கமும்;  வினையின்மேன்மையும் - செய்தொழிலின்
சிறப்பும்; தொழற்கு உரிய தேவரும் - வணங்குதற்கு்உரிய தேவர்களும்;
“குரவரே” - பெரியோர்களே; என - என்று;  பெரிது கோடி - மிகவும்
மனத்திற் கொள்வாய்.

     கேள்வி, ஞானம், சீலம், வினை மேன்மை என்பனவற்றைக் ‘குரவர்’
என்றது உபசாரவழக்கு. பழுது - ஐயம், திரிபு. ஒன்றோ, மற்றொன்றோ எனல்
ஐயம்; ஒன்றைப் பிறிதாக உணர்தல் திரிபு; இவை இரண்டும் இல்லாத
மெய்புணர்வே ஞானமாம். குரவர் இவர் என்பதைப் பின் கூறுவர்.      106