பரதன் ‘யான் தர நீ முடிசூட்டு’ என இராமனை வேண்டல் 2486. | ‘முன்னர் வந்து உதித்து, உலகம் மூன்றினும் நின்னை ஒப்பு இலா நீ, பிறந்த பார் என்னது ஆகில், யான் இன்று தந்தனென்’ மன்ன! போந்து நீ மகுடம் சூடு’ எனா, |
‘மன்ன! - அரசனே!; முன்னர் வந்து உதித்து - எனக்கு முன்னே வந்து பிறந்து; உலகம் மூன்றிலும் - மூன்றுலகத்தும்; நின்னை ஒப்பு இலா நீ- நின்னை ஒப்பாவாரைப் பெற்றிலாத நீ; பிறந்த-; பார் - இப்பூமி; என்னது ஆகில் - (நீ சொன்னபடி) என்னுடைய தாயின்; யான் இன்று தந்தனென் - நான்இப்பொழுது அதனை உனக்குக் கொடுத்துவிட்டேன்; நீ போந்து மகுடம் சூடு’ - நீ வந்துமுடிசூடுவாயாக; எனா- என்று சொல்லி... (மேல் முடியும்). ‘நீ பிறந்த பார்’ என்று சொல்லி, ‘முதலில் இந்தப் பூமியில் நீ பிறந்தபடியால் இது உனக்கே உரிமை; பின்னரே எனக்கு உரிமையாம்’ என்பது பரதன் குறிப்பு. மன்ன! என்று பலமுறையும்பரதன் இப்பகுதியில் இராமனை அழைப்பது குறிக்கொளத்தக்கது. 112 |