2490.‘எந்தை ஏவ, ஆண்டு ஏழொடு ஏழ் எனா
வந்த காலம் நான் வனத்துள் வைக, நீ
தந்தபாரகம் தன்னை, மெய்ம்மையால்
அந்த நாள் எலாம் ஆள், என் ஆணையால்.

     ‘எந்தை ஏவ -என் தந்தை கட்டளை இட்டவாறு; ஆண்டு ஏழொடு
ஏழ் எனா
- பதினான்கு ஆண்டுகள் என்று; வந்த காலம் - அமைந்த
காலம்வரை; நான் வணத்துள் வைக - நான் காட்டில்தங்கியிருக்க; நீ -;
தந்த பாரகம் தன்னை
- தந்தை அளித்த அரசை; மெய்ம்மையால்-
(தந்தையின்) சத்தியம் தவறாமல்; அந்த நாள் எலாம் - அந்தப் பதினான்கு
ஆண்டுகளும்; என் ஆணையால் - என் கட்டளையால்; ஆள் -
ஆள்வாயாக.

     ‘நீ தந்த பாரகம் - எனக்கு நீ கொடுத்த அரசு’ எனினும் ஆம்.
இருவருமாக இணைந்துதந்தையின் வாய்மை தவறாது காத்தலே அறமாம்
என இராமன் பரதன்பால் கூறியதாகக்கொள்க.                      116