பதில் உரைக்கத் தொடங்கிய பரதனை விலக்கி வசிட்டன் மொழிதல் 2492. | ஒள்ளியோன் இனைய எல்லாம் உரைத்தலும், உரைக்கலுற்ற பள்ள நீர் வெள்ளம் அன்ன பரதனை விலிக்கி, ‘பண்டு தெள்ளிய குலத்தோர் செய்கை சிக்கு அறச் சிந்தை நோக்கி, ‘வள்ளியோய்! கேட்டி’ என்னா, வசிட்ட மாமுனிவன் சொன்னான்; |
ஒள்ளியோன் - சீறிய அறிவாளனாகிய இராமன்; இனைய எல்லாம் உரைத்தலும்- இத்தகைய சொற்களையெல்லாம் எடுத்துக் கூறுதலும்; உரைக்கலுற்ற - அவனுக்குப்பதில் கூறுதற்குத் தொடங்கிய; பள்ள நீர் வெள்ளம் அன்ன பரதனை- பள்ளத்தில்தங்கிய நீர்ப் பெருக்கை போன்ற (குணக்கடலாகிய) பரதனை; விலக்கி-(பேசவொண்ணாமல்) தடுத்து நிறுத்தி; வசிட்ட மாமுனிவன் - வசிட்டனாகிய பெருமையுற்றமுனிவன்; ‘வள்ளியோய் - வள்ளல் தன்மை உடைய இராமனே!; கேட்டி’ - கேட்பாயாக; என்னா - என்று அவனை அழைத்து; ‘பண்டு தெள்ளிய குலத்தோர் செய்கை- முன்னைய (சூரிய) குலத்தார்களுடைய செயல்களை எல்லாம்; சிக்கு அற - ஐயம்திரிபின்றி; சிந்தை நோக்கி - அகத்தே உணர்ந்து; சொன்னான் -சொல்லத் தொடங்கினான். “தள்ளரிய பெருநீதித் தனியாறு புக மண்டும், பள்ளம் எனும் தகையானை” (657) என்று முன்னும் பரதனைக் கூறினார் ஆதலின், ‘பள்ள நீர் வெள்ளம் அன்ன பரதன்’ என்றார். ஒள்ளியோன்; ஒண்மை - அறிவுடைமை; நுண்மாண் நுழைபுலம் எனலாம். “ஒளியார்முன் ஒள்ளியர் ஆதல்” “உலகம் தழீஇயது ஒட்பம்” (குறள். 425, 714.) என்பன காண்க. 118 |