பரதன் தானும் காடு உறைவதாகக் கூறுதல்  

2503.முனிவனும், ‘உரைப்பது ஓர்
     முறைமை கண்டிலெம்
இனி’ என இருந்தனன்;
     இளைய மைந்தனும்,
‘அனையதேல் ஆள்பவர்
     ஆள்க நாடு’ நான்
பனி படர் காடு உடன்
     படர்தல் மெய்’ என்றான்.

     (அது கேட்டு) முனிவனும் - வசிட்டனும்; ‘இனி உரைப்பது ஓர்
முறைமைகண்டிலெம்’ என இருந்தனன்
- இனிமேல் சொல்வதற்குரிய
ஒரு நீதியை அறிந்தோமில்லை என்றுகருதிப் பேசாதிருந்தான்; இளைய
மைந்தனும்
- பரதனும்; ‘அனையதேல் -அப்பபடியானால் (இராமன்
அரசாளமாட்டானானால்); ஆள்பவர் நாடு ஆள்க - இராச்சியத்தை
ஆளுபவர் ஆளட்டும்;  நான் பனிபடர் காடு உடன் படர்தல் மெய்’ -
நான் பனிமிக்ககாட்டில் இராமனுடன் செல்லுதல் சத்தியம் என்றான்.

     ‘யார் ஆண்டால் எனக்கென்ன’ என்றான் பரதன். பனி, துன்பமும்
ஆகும். பரதனுக்காகப் பேசிய முனிவனே பேச இயலாமல்போன பிறகு இனிச்
செயல் இல்லை என்று பரதன் காடுறையும் முடிவிற்கு வந்தான் என்க.    129