பரதன் உடன்படுதல் 2507. | ‘ஆம் எனில், ஏழ் - இரண்டு ஆண்டில் ஐய! நீ நாம நீர் நெடு நகர் நண்ணி, நானிலம் கோ முறை புரிகிலை என்னின், கூர் எரி சாம் இது சரதம்; நின் ஆணை சாற்றினேன்.’ |
‘ஆம் எனில் - அப்படியானால்; ஐய! - தலைவனே; ஏழ் இரண்டு ஆண்டில்- பதினான்கும ஆண்டுகள் கழிந்தவுடன்; நீ -; நாம நீர் நெடுநகர் நண்ணி - (பகைவர்)அஞ்சம்படியான அகழி நீர் சூழ்ந்த பெரிய அயோத்தி நகரை அடைந்து; நானிலம் - பூமியை;கோமுறை புரிகிலை என்னின் - அரசாட்சி செய்திடாயானால்; (யான்) கூர் எரி சாம்- மிக்க நெருப்பில் (வீழ்ந்து) இறந்து படுவேன்; இது சரதம் - இது உண்மை; நின் ஆணை சாற்றினேன் - உன்மேல் ஆணையிட்டுக் கூறினேன். நாமம் - அச்சம், பெருமை என்னும்பொருள்கள். ‘கோவாகி முறை புரிகிலை என்னின்’ எனப் பிரித்தலும் ஒன்று. 133 |