பரதன், இராமன் திருவடிகளை வேண்டிப் பெற்று  
முடிமேற் சூடிச் செல்லுதல்  

2509. விம்மினன் பரதனும், வேறு செய்வது ஒன்று
இன்மையின், ‘அரிது’ என எண்ணி, ஏங்குவான்,
‘செம்மையின் திருவடித்தலம் தந்தீக’ என,
எம்மையும் தருவன இரண்டும் நல்கினான்.

     பரதனும் -; வேறு செய்வது ஒன்று இன்மையின் - வேறு செய்யக்
கூடியது ஒன்றும்இல்லதமையால்; ‘அரிது’ என எண்ணி - (இராமனைப்
பிரித்து இருத்தல்) இயலாது என்றுகருதி; விம்மினன் ஏங்குறவான் -
அழுது இளைத்து; ‘திருவடித்தலம் செம்மையின்தந்தீக’

என- உன் திருவடிநிலைகள் இரண்டையும் செப்பமாக எனக்கு
அளித்தருளுக எனக் கேட்க; (இராமனும்) எம்மையும் தருவன இரண்டும்
நல்கினான்
- எல்லா உலக இன்பங்களையும் தருவனவாகிய தன் இரண்டு
திருவடிம நிலைகளையும் நிலைகளையும் கொடுத்தருளினான்.

     இம்மை, மறுமை என்றாற் போல எம்மை என்பதற்கு எப்பிறவியினும்
(எல்லா வின்பங்களும்தருவன) எனப் பொருள் உரைத்தலும் ஒன்று.    135