2510.அடித்தலம் இரண்டையும், அழுத கண்ணினான்,
‘முடித்தலம் இவை’ என, முறையின் சூடினான்;
படித்தலத்து இறைஞ்சினன், பரதன் போயினான் -
பொடித் தலம் இலங்குறு பொலம் கொள் மேனியான்.

     தலம் பொடி இலங்குறு பொலம்கொள் மேனியான் பரதன் -
மண்ணின் புழுதி படிந்துவிளங்குகிற பொன்மயமான திருமேனியுடையம
பரதன்; அழுத கண்ணினான் - அழுத கண்ணுடையனாய்;அடித்தலம்
இரண்டையும்
- இராமனின் இரண்டு திருவடிநிலைகளையும்; ‘முடித்தலம்
இவை’ எனமுறையிற் சூடினான்
- எனக்கு முடிகள் இவையே என்று
கொண்டு முறைமைப்படி தலையின்மேற்சூடிக்கொண்டு; படித்தலத்து
இறைஞ்சினான்
- மண்ணில் விழுந்து; வணங்கிப் போயினான்- மீண்டு
(அயோத்திக்குச்) சென்றான்.

     இராமன் திருவடிநிலைகளையே தனக்கு. மகுடமாகச் சூடிக்
கொண்டான்.                                              136