யாவரும் மீளுதல்  

2511.ஈன்றவர் முதலிய எண் இல் சுற்றமும்,
சான்றவர் குழுவொடு தவத்துளோர்களும்,
வான் தரு சேனையும், மற்றும் சுற்றுற,
மூன்று நூல் கிடந்த தோற் முனியும் போயினான்,

     ஈன்றவர் முதலிய எண் இல் சுற்றமும் - பெற்ற தாயர் முதலாகிய
கணக்கிட முடியாதசுற்றத்தினரும்; சான்றவர் குழுவொடு- பெரியோர்களும்;
தவத்துளோர்களும் - தவமுனிவர்களும்; வான்தரு சேனையும்- பெருமை
பொருந்திய சேனையும்; மற்றும் -ஏனைய பிறரும்; சுற்றுற - (பரதனைச்)
சூழ்ந்து செல்ல; மூன்று நூல் கிடந்த தோள்முனியும் - முப்புரி நூல்
அணிந்த தோள்களை உடைய வசிட்ட முனிவனும் (உடன்வர); போயினான்-
மீண்டு சென்றான்.

     வடமும், வடத்திற் புரியும், புரியில் நூலும் மும் மூன்றாகவே
அமைதலின் ‘மூன்று நூல்என்றார். ஒன்பது கொண்ட மூன்று புரி நுண்
ஞாண்” (திரு முருகு 183.) என்பது காண்க. வான் -உயர்வு, அரசர்க்கு
உயர்வு தருகின்ற சேனை என்பதாம்.                             137