தன்மைந்தனுக்கு ஓதினான் என்று உரைத்து, திருதராட்டிரன் துரியோதனனுக்குச் சொன்னது இவ்வுபாய மென்பாரு முளர். ஓகாரம் - எதிர்மறை. காளைபோன்றவனைக் காளையென்றது, உவமவாகுபெயர். காளை - இளவெருது; இது-கம்பீரமான தோற்றத்துக்கும், நடைக்கும், வலிமைக்கும்உவமை. 'கார்' என்ற நிறப்பெயர், அதனையுடைய மேகத்துக்குப் பண்பாகுபெயர். 'தேடும் விரகு' என்றஇடத்து, மகரக்குறுக்கம் காண்க. மைந்தனுக்கு ஓதினா னென இயையும். (164) 6.-ஓர் ஒற்றன்விராடநகரத்துநிலைமையை யெடுத்துக்கூறுதல். ஒற்றாளிலொருவன்பணிந்தென்றுமெவ்வாழ்வுமுண்டாகியே விற்றானைவெம்போர்விராடன்றன் வளநாடுமேம்பட்டதால் மற்றாழ்புயக்கீசகன்றானுமொருவண்ணமகள்காரணத்து இற்றானெனுஞ்சொல்லுமுண்டென்றுநிருபற்கெடுத்தோதினான். |
(இ -ள்.)(அப்பொழுது),-ஒற்று ஆளில் ஒருவன்-(தேடிவந்த) ஒற்றர்களுள்ஒருவன்,-பணிந்து - வணங்கி,-'வில் தானை-வில்லையுடைய சேனையையும்,வெம் போர்-(பகைவர்க்குக்) கொடிய போரையுமுடைய, விராடன்தன் -விராடராசனது, வளம் நாடு ஏ - வளப்பம் பொருந்திய மச்சதேசமொன்றே,என்றுஉம் - எந்தநாளைக் காட்டிலும், எ வாழ்வுஉம் உண்டு ஆகி -எல்லாவாழ்வுகளும் உள்ளதாய், மேம்பட்டது -(மற்றையெல்லாநாடுகளினும்இப்பொழுது) மேன்மைப்பட்டிருக்கின்றது; மல் - மற்போரில்வல்ல, தாழ்-(முழங்காலளவும்) நீண்டு தொங்குகின்ற, புயம் - கைகளையுடைய, கீசகன்உம்-கீசகனென்பவனும், ஒரு வண்ணம்மகள் காரணத்து - அலங்காரஞ்செய்கின்றஒரு (பணிப்) பெண்ணை விரும்பிய காரணத்தால், இற்றான் - இறந்தான், எனும்சொல்லும்-என்கிற ஒருவார்த்தையும், உண்டு - உளது', என்று-, நிருபற்கு-துரியோதனராஜனுக்கு, எடுத்து ஓதினான் - எடுத்துச் சொன்னான்; (எ - று.)
மழைவளநிலவளத்தோடு அறம்தவறியகீசகன் கொல்லப்பட்டானென்று சொல்லப்படுவதையும் ஓரொற்றன் துரியோதனனுக்குத் தெரிவித்தானென்க. கீசகன் - விராடன் மனைவியாகிய சுதேஷ்ணையின் உடன் பிறந்தவன். கீசகனும்என்றஉம்மை - வீமசேனனைப்போன்ற பெருவீரராலன்றிப் பிறராற் கொல்லமுடியாத அக்கீசகனது பலவாயிரம் யானைபலங்கொண்ட வலிமையின் உயர்வைத் தெரிவித்து நின்றது. வண்ணமகள் - ஒப்பனைசெய்பவள். ஒருவண்ணமகள் காரணத்துக் கீசகன் இற்றா னென்ற செய்தியை எடுத்துக் கூறியது, அங்கு வீமன் இருத்தல்கூடு மென்று குறிப்பித்தற்கு. எவ்வாழ்வும், எகரவினா - எஞ்சாமைப்பொருளை யுணர்த்திற்று. வாழ்வுகள் - ராஜாங்கம், மக்கள், சுற்றம், பொன், மணி, நெல், வாகனம், அடிமை என்னும் அஷ்டைசுவரியங்கள்; உம்மை-முற்றுப் |