பக்கம் எண் :

110பாரதம்விராட பருவம்

     நாலைந்து தொடை - சிலதொடை என்றலுமாம், முகம் மாற - முகம்
ஒளியிழக்க என்றலுமாம்.  வினைத் தேர் - சித்திரவேலைத்திறமமைந்த
தேருமாம்.                                                   (174)

வேறு.

16.-கங்கபட்டனது தூண்டுதலாற்பலாயனன் போர்க்கு
எழுதல்.

திண்டிறற்சிலைவிராடனைத்தேரொடும்பிணித்துக்
கொண்டுபோதலுங்குருகுலக்கோமகமுனிவன்
கண்டுதன்றிருத்தம்பியைக்கடைக்கணித்தருள
மண்டுதீயெனவெழுந்தனன்மடைத்தொழில்வல்லான்.

      (இ -ள்.) (இவ்வாறு திரிகர்த்தராஜன்), திண் திறல் சிலை - மிக்க
வலிமையுள்ள வில்லையுடைய, விராடனை-, தேரொடுஉம் பிணித்து-(தன்)
தேருடன் சேர்த்துக்கட்டி, கொண்டுபோதலும் - கொண்டுபோனவளவில், -குரு
குலம் கோமகன் முனிவன் - (கங்கபட்டனென்னும் பெயரோடு)
முனிவேடங்கொண்டுகரந்துறைகின்ற குருகுலத்தில்தோன்றிய சிறந்த அரசனான
யுதிஷ்டிரன், கண்டு - (அதனைப்) பார்த்து, தன் திரு தம்பியை - தனது சிறந்த
தம்பியாகிய (பலாயனனென்னும்பெயர்பூண்ட) பீமசேனனை, கடைக் கணித்தருள
- அருளொடுகடைக்கண்ணாற் பார்த்து (விராடனை விடுவிக்கவேண்டுமென்று)
குறிப்பிக்க,-மடை தொழில் வல்லான் - உணவு சமைத்தற்றொழிலில்
வல்லவனான அப்பலாயனன், மண்டு தீ என - மூண்டெரிகின்ற
நெருப்புப்போல, எழுந்தனன்-(போர்செய்தற்குக்) கொதித்தெழுந்தான்; (எ - று.)

     இதனால் பாண்டவரது நன்றியறிவுடைமையும், தமையனார் கட்டளையை
எதிர்பார்த்து அதனைக்கடவாதுநிற்கும் அத்தம்பியரது தன்மையும் நன்கு
விளங்கும்.  கோமகமுனிவன் - ராஜரிஷி யென்றவாறுமாம்.  திரு-
தைரியலட்சுமியுமாம்.  மடைத்தொழில்-உணவுக்கு உரியதொழில்; எனவே,
சமையலாயிற்று.

      இதுமுதல் ஐம்பத்துநான்கு கவிகள் - பெரும்பாலும் முதற்சீரும்
ஈற்றுச்சீரும் மாச்சீர்களும், நடுச்சீர்மூன்றும் விளச்சீர்களுமாகிய நெடிலடி
நான்குகொண்ட கலிநிலைத்துறைகள்.                             (175)

17.-பலாயனன் பொருதுதிரிகர்த்தனைப் பற்றுதல்.

உகத்தினீறுதோறோதையோடூதையாந்தாதை
நகத்தினாலுயர்நகங்களைநறுக்குமாபோலத்
திகத்தபூபதிதேரினைவேறொருதேரால்
தகர்த்துவில்லொடுமகப்படுத்தினனவன்றனையும்.

      (இ -ள்.) (எழுந்த பலாயனன்),-தாதை ஆம் ஊதை - (தனது)
தந்தையாகிய வாயு, உகத்தின் ஈறு தோறு - யுகமுடிவு [கற்பாந்தகாலந்]தோறும்,
ஓதையோடு - பேரொலியுடனே, நகத்தினால் -