பக்கம் எண் :

நிரை மீட்சிச் சருக்கம் 117

கோ நிரை -(இடையர்கள் பால்கறக்கப் பிடிக்கின்ற) குடங்களை
நிரப்புவனவாகிய குவிந்த முலைகளையுடைய பசுக்களின் கூட்டங்களை,
மீட்பான் - (பகைவரினின்று) மீட்டுக்கொண்டு வருதற்பொருட்டு, தென் திசை
சென்றான் - தெற்குப் பக்கத்துக்குப் போனான்: (இப்படிப்பட்ட சமயத்தில்),
மாசுணம் கொடியோன் - சர்ப்பத்தின் வடிவமெழுதிய கொடியையுடையவனான
துரியோதனனது, அடல் வயம் படை - வலிமையையும் வெற்றியையுமுடைய
சேனை, வடதிசை புலம் முழுவதும் - (ஊர்க்கு) வடக்குப் பக்கத்தினிடம்
முழுவதும், ஆழியின் - கடல்போல, பரந்ததை - பரவிற்று; (எ - று.)

     தென்புறத்தில் பசுநிரை மீட்கச்சென்ற சமயம் பார்த்து, வடபுறத்து
ஆனிரை கவருமாறு துரியோதனன் சேனை பரவிற்றென்றனர் ஆயரென்க.
ஒவ்வொருமுலையும் குடம்குடமாகப் பால் சொரியுமென, பசுக்களின் சுரப்பு
மிகுதி கூறியவாறு; "சீர்த்தமுலைபற்றி, வாங்கக் குடநிறைக்கும் வள்ளற்
பெரும்பசுக்கள்" என்றார் பெரியாரும்.  அன்றே - ஈற்றசை.  பரந்ததை-ஐ,
சாரியை.                                                   (185)

27. நாட்டிலுள்ளனபலன்களுங்கவர்ந்தனர்நறுந்தண்
காட்டிலுள்ளனசுரபியின்கணங்களுங்கவர்ந்தார்
கூட்டிலுள்ளுறைகலுழனின்குஞ்சுபோலினிநீ
வீட்டிலுள்ளுறைகின்றதென் வேந்தன்மாமதலாய்.

    (இ -ள்.) வேந்தன் மா மதலாய் - விராடராசனது சிறந்த குமாரனே!-
(துரியோதனாதியர்), நாட்டில் உள்ளன - (நமது) தேசத்திலுள்ளவையாகிய,
பலன்களும் - (தானியம் முதலிய) விளைபயன்களையும், கவர்ந்தனர் -
ஒழித்துவிட்டார்கள்; நறுந் தண் காட்டில் உள்ளன - (நாட்டையடுத்த) நல்ல
[செழித்த] குளிர்ச்சியான காட்டில் உள்ளவையாகிய, சுரபியின் கணங்களும் -
பசுக்களின் கூட்டங்களையும், கவர்ந்தார் - கொள்ளை கொண்டார்கள்; இனி -
இங்ஙனங் கொண்டு போனபின்பும், நீ -, கூட்டில் உள் உறை கலுழனின்
குஞ்சுபோல் - (வெளிப்பட்டுத் தன்பகையாகிய பாம்புகளை வெல்லாமற்)
கூட்டினுள்ளே அடைந்து கிடக்கின்ற கருடப்பறவையின் குஞ்சு போல, வீட்டில்
உள் உறைகின்றது - வீட்டிற்குள்ளேயே வாசஞ் செய்து கொண்டிருக்கின்றது,
என் - என்னே? (எ - று.)

     பறவைக்கரசனாகிய கருடன் பாம்புகளை அழிக்குமாறுபோல
ராஜகுமாரனாகிய நீயும் வெளிப்பட்டு வந்து பாம்புக்கொடியோனாதியரை
அழிக்க வேண்டாவோவென்றார்; உவமையணி.  மேல்'மாசுணக்கொடியோன்'
என்று பகைவனைக்குறித்து, இங்கு 'கலுழனின் குஞ்சு போல்' என்று
உத்தரனுக்கு உவமைகூறியது - உன்தந்தையைப் போலவே உன்னையுங்
கண்டமாத்திரத்திலே அப்பகைவர் ஒடுங்கி யொழிவ ரென்று குறிப்பித்து
உத்தரனை உத்ஸாஹப்படுத்துதற்பொருட் டென்க.

      பலன்- போலி.  கலுழன் - கருடனென்ற வடசொல்லின் விகாரம்.
குஞ்சு - இளமைப்பெயர்; மதலாய் - மதலையென்பதன் விளி.  25-ஆம்