பக்கம் எண் :

நிரை மீட்சிச் சருக்கம் 119

என்றுசொல்லி, நகையா - பரிகாசமாகச்சிரித்து, அரைத்த ஆரம்உம் -
அரைத்தசந்தனக் குழம்பையும், ஆரம் உம் - முத்துமாலைகளையும்,
மாலைஉம் - பூமாலைகளையும், அணிந்து-, என்வரை தடபுயம் வளர்த்தது -
என்னுடைய மலைபோன்ற [வலிய] பெரிய தோள்களைவளர்த்தது, மகளிர்
போர் பொரஓ - (பகைவரோடு யான் போர் செய்யாமற்) பெண்பாலார் (சென்று)
யுத்தஞ் செய்தற்காகவோ? (எ - று.)- இச்செய்யுளில் 'நகையா' என்ற எச்சம்,
அடுத்த செய்யுளில் 'என்றான்' என்ற முற்றைக் கொள்ளும்.

      யான்,எனது வளர்ந்த வரைத்தடந்தோள்களாற் பொரவேண்டாவோ?
பொருது வெற்றி பெறவேண்டாவோ? என்றான்.

      கதுமென- விரைவுப்பொருளைத் தருவதோர் இடைச்சொல்.  ஓதி -
பெண்மயிர்; இங்கு அதனையுடையவளுக்குச் சினையாகுபெயர்.  நரைத்த ஓதி
- அடையடுத்த ஆகுபெய ரென்க.  'நரைத்த ஓதி' என்ற பெயர் - இங்கு
அண்மைவிளி யாதலின், இயல்பாயிற்று.  நன்று - இகழ்ச்சிக்குறிப்பு; நன்றன்
றென்றபடி.  இங்குக் கூறிய நகை, இகழ்ச்சி பொருளாக வீரத்தெழுந்த
வெகுளிநகை.                                               (188)

30. கனைகடற்படையுடனிரைக்கணங்கவர்ந்தவரை
முனைபடப்பொருதிமைக்குமுன் முதுகுகண்டிடுவேன்
வினைமுகத்தினையறிந்துதேர்விசையுடன்விடவென்
நினைவொடொப்பதோர்சாரதி நேர்ந்திலனென்றான்.

      (இ -ள்.) கனை கடல் படையுடன் - ஆரவாரஞ்செய்கின்ற கடல்
போன்ற சேனையோடு (வந்து), நிரை கணம் கவர்ந்தவரை - (நமது)
பசுக்கூட்டங்களைக் கொள்ளைகொண்ட துரியோதனாதியரை, முனை -
போர்க்களத்தில், பட - அழியும்படி, பொருது - (யான் ஒருவனே போய்ப்)
போர்செய்து, இமைக்கும் முன் - ஒருமுறை கண்ணிமைக்கும் பொழுதைக்கு
முன்னமே [மிகவிரைவில்], முதுகு கண்டிடுவேன்-புறங்கொடுத் தோடச்
செய்வேன்;  (ஆனால்), -வினை முகத்தினை அறிந்து - போர்தொழிலின்
தன்மையைத் தெரிந்து, (அதற்கு ஏற்ப), தேர் - தேரை, விசையுடன் விட -
வேகமாக நடத்துவதற்கு, என் நினைவொடு ஒப்பது ஓர் சாரதி - என்மனத்
தோடொத்த தன்மையையுடைய ஒரு பாகன், நேர்ந்திலன் - (இப்பொழுது
எனக்குக்) கிடைத்தானில்லை, என்றான் - என்று சொன்னான்; (எ - று.)- என்
நினைவிற்கு ஏற்ற சாரதிமாத்திரங்கிடைப்பனாயின், உடனே பொருது வெல்வே
னென்றபடி.

     நேர்ந்திலன் - எதிர்மறையாண்பாலிறந்தகால முற்று; தன்மையொருமை
முற்றாய், சாரதியைப்பெற்றிலே னென்றலு மொன்று.                  (189)

31.-பிருகந்நளைதேர்செலுத்தவல்ல ளென்று விரதசாரணி
கூறுதல்.

உத்தரன்புகலுறுதிகேட்டொப்பனைக்குரியாள்
கொத்தரம்பொருகூரயிற்குமரனைக்குறுகி