பக்கம் எண் :

நிரை மீட்சிச் சருக்கம் 121

வென்றுபோர்முனையரசரைவிடலைவெய்தீண்டுந்
துன்றுதாரினாயெனவியந்தின்னவைசொன்னாள்.

     (இ - ள்.) என்ற போது-என்று(விரதசாரணியென்ற வண்ண மகள்)
சொல்லியபோது, அவன்-அந்த உத்தரகுமாரன், பயந்தவட்கு - (தன்னைப்)
பெற்ற தாயினிடம், இயம்பியது உரைப்ப - (வண்ணமகள்) கூறியதைத்
தெரிவிக்க,-நிரை வளை - வரிசையாக அமைந்த வளையல்களையணிந்த
அந்தச்சுதேட்டிணை,-நின்ற பேடியை - அங்கிருந்த பிருகந்நளையென்னும்
பேடியைக் கிட்டி, தழுவி-, 'துன்றுதாரினாய் - நெருங்கிய மாலையை
யணிந்தவளே! நீ-, - நேரில் (சாரத்தியஞ்செய்ய) உடன்பட்டாயேயானால்,
விடலை - (என்) புதல்வன்?,- போர்முனை - போர்க்களத்தில், அரசரை -
மாற்றரசரை, வென்று - ஜயித்து, வெய்து ஈண்டும் - விரைவில்
மீண்டுவந்திடுவான்,' என - என்று, வியந்து - (அப்பேடியைக்) கொண்டாடி,
இன்னவை சொன்னாள் - இவ்வாறான வார்த்தைகளைக் கூறினாள்; (எ - று.)

     நிரைவளை - அன்மொழித்தொகை. பயந்தவட்கு - வேற்றுமை மயக்கம்.
இதனை, செருகுகவியென்பர் ஒருசாரார்.                        (191)

33.-பிருகந்நளைதேர்செலுத்த,உத்தரன் போர்க்குச்
செல்லுதல்.

நாடிவாசியினல்லனநான்கவைபூட்டித்
தேடியாயுதஞ்சிலைமுதற்றெரிந்தவைகொண்டு
கோடிகோடிபைங்கோதையர்குழீஇயினர்வாழ்த்தப்
பேடிதேர்விடச்சென்றனன்சுதேட்டிணைபிள்ளை.

     (இ -ள்.) பேடி - பிருகந்நளை, வாசியில் - குதிரைகளுள்ளே, நல்லன
நான்கு அவை - நல்லிலக்கணமமைந்தனவாகிய நான்குகுதிரைகளை, நாடி-
தேடி அறிந்து, பூட்டி - நுகத்தடியிற் சேர்த்துக்கட்டி, தேர்விட - தேரைச்
செலுத்த,-சுதேட்டிணை பிள்ளை - சுதேஷ்ணையினது புத்திரனாகிய
உத்தரனானவன்,-சிலை முதல்-வில் முதலியனவாகிய, ஆயுதம் அவை -
ஆயுதங்களை, தேடி தெரிந்து - ஆராய்ந்து அறிந்து, கொண்டு - (நல்லனவாக)
எடுத்துக்கொண்டு,-கோடி கோடி பைங்கோதையர் - பசுமையான [கரிய]
கூந்தலையுடைய அநேக கோடி மகளிர், குழீஇயினர் வாழ்த்த - திரண்டு
வாழ்த்துக் கூற, - சென்றனன்-(போர்க்குப்) புறப்பட்டுப் போனான்; (எ - று.)

     இதுமுதல் உத்தரதிசை நிரைமீட்சி கூறுகின்றார்.  'தேடியாயுதஞ்
சிலைமுதல்தெரிந்தவைகொண்டு' என்றதையும் பேடியின் செயலாக
உரைக்கலுமாம்.'நான்கவை' 'ஆயுதமவை' என்றவற்றில், 'அவை' -
பகுதிப்பொருள் விகுதி.பைங்கோதை - குளிர்ச்சியான கூந்தல்; பசியமாலை
யாகவுமாம்.  'கூந்தலுக்குப்பசுமையாவது - எண்ணெயிட்டு வாரி மயிர்ச்சாந்து
தடவப்பெற்றுஅழகுகுறையாமை' என்பர் ஒருசாரார்.                 (192)