34.-உத்தரன் தனது நகரத்து வடபுறஞ் சேர்தல். விலங்கன்மாமதில்களும்புறவீதியுங்கடந்தாங்கு இலங்குநேமியொன்றுடையதேரென்னலாந்தேர்மேல் துலங்குபேரொளியருக்கனிலுருத்தெழுதோற்றத்து அலங்கலுத்தரனுத்தரதிசையைவந்தடைந்தான். |
(இ -ள்.) துலங்கு பேர் ஒளி அருக்கனில் - விளங்குகின்ற மிக்க ஒளியையுடைய சூரியன்போல, உருத்து எழு - மிக்கு விளங்குகின்ற, தோற்றத்து - காட்சியையும், அலங்கல் - (நிரைமீட்டற்குரிய கரந்தைப்பூ) மாலையை யுமுடைய, உத்தரன்-, -இலங்கும் நேமி ஒன்று உடைய தேர் என்னல் ஆம் - விளங்குகின்ற ஒற்றைச் சக்கரத்தையுடைய (சூரியனது) இரதமென்று (ஒப்புமை) சொல்லத்தக்க, தேர்மேல் - சிறந்ததொரு தேரிலே (ஏறி),- விலங்கல் மாமதில்கள்உம் - மலைபோலுயர்ந்த பெரிய மதில்களையும், புறம் வீதிஉம் - (நகரத்தின்) வெளிவீதிகளையும், கடந்து - தாண்டி, உத்தரதிசையை - (அந்நகரத்தின்) வடக்குப்பக்கத்தை, வந்து அடைந்தான் -; (எ - று.) 'உத்தரனுத்தரதிசையை வந்தடைந்தான்' என்ற இடத்தில் சொற்சமத்காரங்காண்க; உத்தரதிசையையடைதற்கு உரியன் உத்தர னென்பது போதரும்,அருக்கனில் உத்தரன் உத்தரதிசையை யடைந்தான் என்று இயைத்து,இலங்குநேமியொன்றுடைய தேரிலேறித் துலங்குபேரொளியருக்கன் (உத்தராயணத்தில்) வடபுறஞ்செல்லுதல்போல, உத்தரன் தேர்மேல் உத்தர திசையை யடைந்தானென்று கருத்துக் காணலாம். சூரியனது தேர் - மிகவிரைந்து செல்லுதற்கு உவமை; "ஒற்றைத்தனி யாழித்தேரென்ன வோடுவதோர், கொற்றநெடுந்தேர்" என்றார், பிறரும். விலங்கல் - (ஊர்க்குஒருபுறமாக) விலகிநிற்பது என்று காரணப்பொருள். திருக்குறளில், "வாய்ந்தமலை" என்ற இடத்தில் பரிமேலழகர் இடையதன்றி ஒருபுடையதாதலை மலைக்கு வாய்ப்பென்றமை காண்க. (193) 35.-உத்தரன் துரியோதனனது சேனையைக்காணுதல். விண்கொளாமதிமேன்மைகொண்மீனினமென்ன மண்கொளாவிறன்மன்னுடைவரம்பில்வான்படையை எண்கொளாமனத்திராகவன் றிருக்குலத்திளைஞன் கண்கொளாவகைபுகுந்துதன்கண்ணுறக்கண்டான். |
(இ -ள்.) எண் கொளா மனத்து - (சேனையின் தன்மை இன்னதென்று) ஓர் எண்ணத்தைக் கொள்ளாத மனத்தையுடைய, இராகவன் திரு குலத்து இளைஞன் - ஸ்ரீராமபிரான் திருவவதரித்த சிறந்த சூரிய குலத்துத் தோன்றிய சிறுவனான உத்தரகுமாரன்,-கண்கொளா வகை புகுந்து - (காண்பவர்) கண்களுக்கு எட்டாதபடி [மிக விரைந்து] சென்று,-(அங்கே),-விண் கொளா மதி - ஆகாயத்தில் தோன்றாத [பூமியில் தோன்றியதொரு] சந்திரனையும், மேன்மை கொள் மீன் இனம் என்ன - (அச்சந்திரனைச்சூழ்ந்த) மேன்மைபெற்ற |